அண்ணாமலையின் என் மண் - என் மக்கள் நடைபயண யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுப்பு

0 7701

புதுக்கோட்டையில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள என் மண் - என் மக்கள் யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

யாத்திரை நடைபெறும் பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள்,  மக்கள் கூடும் இடங்கள்,  மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் யாத்திரைக்கு மாற்று பாதைகளில் அனுமதி வழங்க பாஜகவுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அண்ணாமலையின் நடை பயண யாத்திரை இன்று மாலை 3 மணிக்கு கந்தர்வகோட்டை தொகுதியிலும் மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும் நடைபெற உள்ளது.

இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நடை பயணத்திற்கு புதுக்கோட்டை மச்சுவாடியிலிருந்து பிருந்தாவனம், கீழ ராஜ வீதி வழியாக  அண்ணா சிலை வரை நடைபெற காவல்துறையிடம் அனுமதி கேட்டு பாஜக விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments