சம்மன் கொடுக்க சென்ற காவலரை கடித்த கார் திருடன் கைது

0 1035

கோவையில் கார் திருடனுக்கு சம்மன் கொடுக்க சென்ற  போலீஸ் ஏட்டின் கையை கடித்தவரை  மடக்கிப் பிடித்து  போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை அடுத்த சரவணம்பட்டி அருகே வசிக்கும் சண்முக சுந்தரம் என்பவர் காரை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி எடுத்துச் சென்ற பிரகாஷன் என்பவர் மாயமாகி விட்டார்.

இதையடுத்து சண்முக சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில்  கோவை கணபதி அருகே  சிவராம் நகரில் உள்ள ஆதி வீதியில் வசித்த பிரகாஷனுக்கு சம்மன் கொடுக்க போலிஸ் ஏட்டுச் சென்றார்.

அப்போது அவருடன் வாக்குவாதம் செய்து  பிரகாஷன்  அவரை கடித்து விட்டார். இதன் பின்னர் உயர் அதிகாரிகள் உத்தரவின்படி பிரகாஷனை பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments