புதுச்சேரியின் முன்னாள் சபாநாயகர் கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.

0 1910

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் நுரையீரல் தொற்றால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுச்சேரி அரசில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி., என முக்கிய பதவிகளை வகித்தவர் கண்ணன். காங்கிரஸ், தமாகா, அதிமுக மற்றும் பாஜகவில் சேர்ந்து இவர் பணியாற்றி உள்ளார்.

கடந்த 1ஆம் தேதி ரத்த அழுத்த குறைவு மற்றும் சுவாச கோளாறு காரணமாக மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கண்ணன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

அவரது உடல் அடக்கம் இன்று அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments