ஆசிரியர், பெற்றோரின் பெருமையை எடுத்துக் கூறி கதற வைத்த நடிகர் தாமு..!

0 1766

நடிகர்களுக்கெல்லாம் பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்கள், தங்களுக்காக வாழும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடுவது உண்டா என்று நடிகர் தாமு கேள்வி எழுப்பினார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேசஞ்சாவடியில் அரசு பள்ளி மாணவிகள் நடுவே பேசிய தாமு, சினிமா என்பது வெறும் நடிப்பு தான் என்றும், அதைப் பார்த்து ஏமாறக் கூடாது என்றும் கூறினார்.

தாமுவின் பேச்சைக் கேட்ட மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கினர். சில மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி, இனி நன்கு படிப்பதாக உறுதியளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments