தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

0 2766

தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மக்கள் மனநிலை காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதனால் பாஜகவுக்கு  ஏற்பட்ட தோல்வி பயத்தினால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் மூலம் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments