ராமநாதபுரம் போக்சோ வழக்கில் தலைமறைவானவரை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

0 2289

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் போக்சோ வழக்கில் தலைமறைவானவரை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஆனந்தநகர் பகுதியை சேர்ந்த ஜேசு என்ற அசோக்குமார் போக்சோ வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானதால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, முதுநிலை காவலர் காளிமுத்து உள்பட மூன்று காவலர்கள் ஜேசு வீட்டுக்கு சென்றபோது போலீஸாருடன் வர மறுத்து அவர்களை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

உடன் வந்த மற்ற காவலர்கள் ஜேசுவை மடக்கிப் பிடித்து கைது செய்ததோடு, காயமடைந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments