சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கினாலும் ஒரு மணி நேரத்தில் அகற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

0 1689

சென்னையில் மழைநீர் தேங்கும் 37 தாழ்வான பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், ஒரே நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை பெய்தாலும், சாலைகளில் தேங்கும் மழைநீரை ஒரு மணி நேரத்திற்குள்ளாக அகற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மழை காரணமாக, சென்னையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், திரு.வி.க. நகர் மண்டலத்தின் அங்காளம்மன் கோவில் தெரு, ஸ்டீபன்சன் சாலை, ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments