உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா விலகல்

0 2944

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார்.

பங்களாதேஷ் உடனான லீக் போட்டியின்போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா, நேராக வந்த பந்தை காலில் தடுக்க முயன்றுபோது கணுக்காலில் காயம் அடைந்தார்.

கணுக்காலில் தசைநார் கிழிந்ததையடுத்து, பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அரை இறுதிக்கு முன் முழு உடற்தகுதி பெற்று இந்திய அணிக்கு அவர் திரும்புவார் என கூறப்பட்டது. இந்நிலையில் காயம் முழுமையாக சரியாக நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், அவரை உலகக்கோப்பை தொடரிலிருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது.

அவருக்கு பதிலாக இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments