இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

0 1830

இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்து விட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டி உள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள சத்தர்பூரில் PDA எனப்படும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினர் பேரணியில் பங்கேற்ற அவர், நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதே நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு சீட் ஒதுக்கவில்லை என்றால் தனித்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்திருப்பதாகவும் அகிலேஷ் கூறினார்.

இண்டியா கூட்டணி பொதுத்தேர்தலுக்காக மட்டுமே என்று குறிப்பிட்ட அகிலேஷ், காங்கிரஸ் தங்களைத் தொடர்ந்து புறக்கணித்தால் அவர்களுடன் யார் நிற்பார்கள் என்றும், இதுபோல் குழப்பங்களுடன் பாஜகவுக்கு எதிராகப் போராடினால் வெற்றியடைய முடியாது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments