தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட புதுமண ஜோடி உடல்கள் தகனம்

0 4122

ஒருமணி நேரத்தில் மகளை ஒப்படைக்காவிட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் என மிரட்டியது மாதிரியே செய்து விட்டார்கள் என தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துக் கொண்ட 3-வது நாளிலேயே படுகொலை செய்யப்பட்ட மாரிசெல்வத்தின் தந்தை கூறினார். 

மாரிசெல்வமும் கார்த்திகாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பெண்ணின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தும் காதலை கைவிட கார்த்திகா மறுத்து விட்டதாகவும் மாரிசெல்வத்தின் தந்தை வசந்தகுமார் கூறினார்.

உடற்கூராய்விற்கு பிறகு இருவரது உடலும் வசந்தகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள மின்மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments