ஆஃப்கான் அகதிகளை கைது செய்து முகாம்களில் அடைக்கும் பாகிஸ்தான் போலீசார்

0 1065

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கிவரும் ஆஃப்கானியர்கள் அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், வெளியேறாதவர்களை போலீசார் கொத்துகொத்தாக கைது செய்து  முகாம்களில் அடைத்துவருகின்றனர்.

ஆஃப்கான் அகதிகள் 17 லட்சம் பேர் பாகிஸ்தானில் வசித்துவந்த நிலையில், இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் ஆஃப்கானுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இரு நாடுகளையும் இணைக்கும் டோர்கம் எல்லைச்சாவடியில் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆஃப்கான் அகதிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments