தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 2444

தெற்கு வங்கக்கடல் பகுதியிலும், இலங்கையை ஒட்டிய கடற்பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில், அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இன்றும், நாளையும், ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments