கணவர் வீட்டிற்கு வர மறுத்த மனைவி, குடிபோதையில் மனைவியின் வீட்டை அடித்து நொறுக்கி, 3 மாத குழந்தையை தூக்கி சென்ற ராணுவ வீரர்.

0 1997

மதுரை அருகே பிரசவத்திற்காக தாய்வீடு சென்ற மனைவியை வீட்டிற்கு அழைத்தும், அவர் வராததால், மாமியார் வீட்டை அடித்து நொறுக்கி, 3 மாத குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாக ராணுவ வீரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் சோழவந்தானை சேர்ந்த சூரியபிரகாஷ் விடுமுறையில் ஊர் திரும்பிய நிலையில், அவரது மனைவி கார்த்திகாராஜுவை உடனடியாக வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. கார்த்திகா ராஜு வர மறுத்ததால், பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று சூரியபிரகாஷ், தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சூரியபிரகாஷ் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் மதுபோதையில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரது உறவினர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments