பாரீசில் மெட்ரோ ரயிலின் சுரங்கப்பாதையை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணை சுட்டுப்பிடித்த போலீசார்

0 929

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மெட்ரோ ரயிலின் சுரங்கப்பாதையை வெடி வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த ஹிஜாப் அணிந்த பெண்ணை போலீசார் சுட்டு சிறைப்பிடித்தனர்.

அவரை சோதனையிட்டதில் வெடிகுண்டு போன்ற எந்தவித ஆயுதங்களும் அவரிடம் இல்லை. உடலில் குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையின் எச்சரிக்கையை மீறி அந்தப் பெண் நீங்கள் எல்லோரும் சாகப் போகிறீர்கள் என்று மிரட்டல் விடுத்ததால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments