காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

0 933

காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அந்நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதாவும், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து இஸ்ரேல் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. குண்டு வீச்சு நடத்தப்பட்ட அகதிகள் முகாம் காஸாவில் உள்ள முகாம்களில் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments