சென்னையில் தனியார் நிறுவனத்தில் 41 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் சி.ஆர்.பி.எப் வீரரை போலீசார் கைது

0 1888

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே தனியார் நிறுவனத்தில் 41 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் சி.ஆர்.பி.எப் வீரரை போலீசார் கைது செய்தனர்.

ஹாரிங்டன் சாலை பகுதியைச் சேர்ந்த ஜேக்கப்  என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் கடந்த மாதம் 23ம் தேதி அலுவலகத்தின் பின்பக்க கதவை உடைத்து  மர்ம நபர் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்ப்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் ஸ்கிராப் பொருட்களை குத்தகைக்கு எடுத்து வந்த சக்திவேல் என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தொழில் நஷ்டம் அடைந்ததாலும், தனக்கு போலீசாரின் உத்திகள் நன்கு தெரியும் என்பதாலும் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments