அடுத்தடுத்து நிகழும் ரயில் விபத்துகள் : சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்து..!

0 1630

உத்தரப்பிரதேச மாநிலம் காசிபுரில் இருந்து டெல்லி ஆனந்த் நகர் வரை செல்லும் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. 

ரயில்மெதுவாக சென்றதாலும் அத்தடத்தில் வேறு ரயில்கள் இயக்கப்படாததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதாகவும், பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்றும்  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நகர்த்தி ரயில்பாதையை சீரமைக்கும் பணியில் ஏராளமான ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments