திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது

0 4361

சேலம் மாவட்டம் நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர் ராஜமாணிக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது வீட்டில் டியூஷன் நடத்தி வந்த ராஜமாணிக்கம், பள்ளியில் படிக்கும் மூன்று மாணவிகளை தனித்தனியாக அழைத்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்த மாணவிகள் பள்ளிக்கு செல்ல மறுத்த நிலையில், விவரம் அறிந்த பெற்றோர் அளித்த புகாரில் தீவட்டிப்பட்டி போலீசார் ராஜமாணிக்கத்தை கைது செய்தனர்.

அதே ஆசிரியர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதேபோன்று மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை பணியிட மாற்றம் செய்த நிலையில் மீண்டும் அதே பள்ளிக்கு மாறுதலில் வந்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments