தமிழகதிற்க்கு வழங்க வேண்டிய 140 டி.எம்.சியில், பதில் வெறும் 56.4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது - அமைச்சர் துரைமுருகன்

0 658

தமக்கும், திமுக தலைவருக்கும் வேண்டியவர்களான சித்தராமையாவும், சிவக்குமாரும் காவிரி நீர் பங்கீட்டில் பிடிவாதம் செய்வது ஆச்சரியம் அளிப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 140 டி.எம்.சியில், வெறும் 56 புள்ளி 4 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கி உள்ளதாக கூறினார்.

வரும் 3 ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என துரைமுருகன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments