கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் கோவில் புதுப்பிப்பு பணியின் போது இரு சமூகத்தினர் இடையே மோதல்

0 1022

கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் கோவில் புதுப்பிப்பு பணி தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதோடு, குடிசை வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்காக கிரானைட் கற்களை பாலிஷ் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அப்போது, உருவாகும் தூசு அருகிலுள்ள வீடுகளில் படர்வதால் பாதிப்பு ஏற்படாத வகையில் பணி மேற்கொள்ள ஒருதரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடிசைகளுக்கு தீ வைத்ததாக 2 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments