தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மரியாதை

0 1001

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவையொட்டி பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை உள்ள இடத்திற்கு பெண்கள் முளைப்பாரியும், பால்குடமும் சுமந்து வந்து மரியாதை செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பொதுமக்கள், விலாப்பகுதியில் இரும்பு கம்பிகளை குத்திக் கொண்டு ஊர்வலமாக நடனம் ஆடியபடி சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சென்னையில் இளைஞர்கள் மேளதாளத்துடன் சிலம்பம் சுற்றியபடியும், தீப்பந்தம் ஏந்தியும் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

ஒட்டப்பிடாரம் அருகே பொம்மையார்புரத்தில் ஏராளமானோர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments