திண்டுக்கல்லில் சாலையின் வளைவில் அதிவேகமாக வந்த ஈச்சர் லாரி எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்து 2 பேர் பலி

0 1952

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாலையின் வளைவில் வேகமாக வந்த ஈச்சர் லாரி எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

சின்னாகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் தேங்காயை இறக்கி விட்டு, அங்கிருந்து பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேங்காய் வெட்டுவதற்காக ஈச்சர் லாரியில் சென்றபோது பழனி கொழுமம் சாலையில் வலதுபுரம் வேகமாக திரும்பியுள்ளனர்.

அப்போது எதிரே செங்கல் ஏற்றி வந்த லாரியின் மீது மோதி அடியில் சரக்கு வேன் சிக்கிக் கொண்டதில் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, காளிமுத்து,ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த சுமார் ஐந்துபேரை மீட்ட தீயணைப்பு துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தையடுத்து போக்குவரத்தை சரிசெய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments