கேரளாவில் குண்டுவெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

0 2207

கொச்சி களமசேரி ஜெப கூட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய தலைவர்கள், கேரளாவை மதம் மற்றும் சமூக ரீதியாக பிளவுபடுத்த நடைபெறும் சதி வேலைகளை அரசு முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மாநிலத்தில் அமைதி மற்றும் இணக்கமான சூழல் நிலவ அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனிடையே, குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. காயமடைந்துள்ள 17 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments