தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் ரூ.200 கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல்

0 1662

தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடம் 200 கோடி ரூபாய் கேட்டு 2ம் முறையாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் தேடி வருகின்றனர்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து 200 கோடி ரூபாய் கேட்டு மின்னஞ்சல் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதற்கு முந்தைய நாள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் சுட்டுக் கொன்று விடுவதாக முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் இ மெயில் வந்ததாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து புகாரையடுத்து மும்பை காம்தேவி காவல்நிலைய போலீசார், இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments