பாஜகவின் 4 பேர் கொண்ட குழு ஆளுநர் ஆர்.என் .ரவியை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்

0 1297

தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பாஜக தலைமையால் நியமனம் செய்யப்பட்ட சதானந்தா கவுடா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்துள்ளது.

இக்குழுவினர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.வழக்குப்பதிவு செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோரை இக்குழு மாவட்ட வாரியாக சந்தித்தது.

வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களையும் இக்குழு பெற்றுள்ளது.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை வலுத்துள்ள நிலையில் இக்குழு இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments