ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது

0 924

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருவைகுளத்தில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றுள்ளனர்.  கடந்த 18ஆம் தேதி அங்கு புயல் அறிவிப்பு கொடுக்கப்பட்டதால் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே வந்த மாலத்தீவு கடற்படையினர் தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி  12 மீனவர்களையும் கைது செய்ததுடன் விசைப்படகையும் பறிமுதல் செய்து மாலத்தீவு துறைமுகத்திற்கு இழுத்துச்  சென்றுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments