காஷ்மீரில் நேற்று ஒரேநாளில் 5 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்

0 1115

காஷ்மீரில் நேற்று ஒரேநாளில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்தார். தற்போது காஷ்மீரில் பனிக்காலம் தொடங்க உள்ள நிலையில் எல்லை தாண்டி ஊடுருவும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இலையுதிர் காலத்தில் மட்டும் எல்லை தாண்டி நுழைய முயன்ற 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments