ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

0 2291

ராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ராஜஸ்தானில், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மீது பணமோசடி தொடர்பாக ஜெய்ப்பூர் மற்றும் சிகாரில் உள்ள அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதேபோல், காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஓம் பிரகாஷ் ஹட்லாவுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆசிரியர் போட்டித் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணப்பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments