ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 54 திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியும் ஈரோடு ஸ்மார்ட்டாக தெரியவில்லை - அண்ணாமலை

0 2353

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 54 திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியும் ஈரோடு ஸ்மார்ட்டாக தெரியவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோட்டின் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, சூரம்பட்டி காவல்நிலையம் அருகே நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு ஆயிரத்து 304 கோடி ரூபாய் நிதி அளித்துள்ள நிலையில், ஈரோட்டில் 214 கோடி ரூபாய்க்கு மட்டுமே பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறிய திமுக அரசு, இதுவரை 12 ஆயிரம் பேருக்கு கூட வேலை தரவில்லை என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தி.மு.க. எம்.பி.கள் இதுவரை தமிழகத்திற்கு ஒரு நல்லது கூட செய்யவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments