உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் அனுமதி வழங்கவில்லை: ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு

0 1502

உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காத 22 மாவட்ட காவல் உயரதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக அந்த இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் காவல்துறையினர் காலம் தாழ்த்தியும் சில இடங்களில் அனுமதி கடிதத்தை நிராகரித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. உரிய அனுமதி பெற்று தமிழகத்தில் ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்றும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments