தி.மு.க வன்முறையை எப்பொழுதும் ஆதரிக்காது... ஆளுநர் மாளிகை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்

0 2309

வன்முறையை தி.மு.க எப்பொழுதும் ஆதரிக்காது என ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 3 பெண்களிடம் தொலைபேசியில் பேசி நிராகரிப்பிற்கான காரணத்தை விளக்கினார்.

தாம் கூறியதை அந்த பெண்கள் ஏற்றுக் கொண்டதாகவும், தமிழகத்தில் மொத்தம் 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments