பெரம்பலூர் மாவட்டம் சொந்த ஊர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் முயற்சி

0 1661

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை பூர்வீகமாக கொண்ட மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார், சொந்த ஊர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து, ”பிளஸ் மேக்ஸ்” என்ற பெயரில் தினசரி சந்தையை  நிறுவியுள்ளார்.

இந்த உழவர் உற்பத்தியாளர் தினசரி காய்கறி சந்தையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி. ரவி, மாவட்ட ஆட்சியர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளா தேவி  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய டத்தோ பிரகதீஷ் குமார், தொழில்சாலை ஆரம்பித்தால் கூட 500 பேருக்குத் தான் வேலை தர முடியும் என்பதால் விவசாயிகள் பலன்பெறும் திட்டத்தை துவக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments