ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொடுக்க உதவுவதுபோல் நடித்து... தனியார் வங்கியில் கடனாக பெற்ற ரூ.40 ஆயிரம் திருட்டு

0 1512

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து நாற்பதாயிரம் ரூபாயை திருடிய நபர் மாயமான நிலையில், தனியார் வங்கியில் கடனாக பெற்ற பணம் மொத்தமாக பறிபோனதாக பெண் கூலித்தொழிலாளி வேதனையுடன் கண்ணீர் விட்டு அழுதார்.

வள்ளிப்பட்டியைச் சேர்ந்த அஞ்சலி பாரத ஸ்டேட் வங்கியோடு இணைந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தபோது, அங்கிருந்த இளைஞரின் உதவியை நாடியதோடு, அறியாமையால் ஏடிஎம் கார்டையும், ரகசிய குறியீட்டு எண்ணையும் கொடுத்துள்ளார்.

அஞ்சலியிடம் வங்கிக்கு சென்று ஓடிபி எண்ணை வாங்கி வருமாறு அந்த நபர் கூறியதையடுத்து, வங்கிக்குள் சென்று திரும்பி வந்தபோது இளைஞர் மாயமாகிவிட்ட நிலையில், சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments