அக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை , அதை பெண்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

0 6854

அக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை , அதை பெண்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை பாரிமுனையில் 20 ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு, ஒரு பெண்ணுக்குதான் சமையல் அறையில் என்ன இருக்கிறது என்பது தெரியும், அங்கே சென்று ஆண்கள் அவர்களை ஆதிக்கம் செய்யக்கூடாது. 

என கூறிய எ.வ.வேலு, அதனால் தான் நான் பொண்டாட்டி பேச்சை கேட்க வேண்டும் என்ற படத்தை தயாரித்ததாகவும் கூறினார்.

நானும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையில் ஒரே பெஞ்சில் உள்ளதால், அவரது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வர தாமதம் ஆனதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

உழைப்பவன் முன்னேறுவான், அவனுக்கு ராகு காலம் எம கண்டம் எல்லாமெல்லாம் தேவையில்லை எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments