மது போதையில் ரகளை செய்த இளைஞர்கள்... தட்டிக்கேட்ட காவலரின் மண்டை உடைப்பு

0 1143

சென்னை அம்பத்தூரில் மது போதையில் ரகளை செய்த இளைஞர்கள் சிலர், தட்டிக்கேட்ட காவலரை தாக்கி மண்டையை உடைத்ததாக புகார் எழுந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள புளூ பேக்கேஜ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய பின் மது அருந்தி ரகளையில் ஈடுபட்டதாக உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அமைதியாக இருக்குமாறு கூறிய போது, ரகுபதி என்ற காவலரை தொழிலாளர்களில் சிலர் கடுமையாகத் தாக்கி மண்டையை உடைத்ததாக கூறப்படுகிறது.

உடனே அங்கிருந்து தப்பி ஓடிய போலீசார் மற்ற போலீசாரை அழைத்து வந்து ரகுபதியை மீட்டனர். மருத்துவமனையில் காவலர் ரகுபதியின் தலையில் 5 தையல் போடப்பட்டது. தாக்குதல் நடத்தியவ்ரகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments