ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாற்றுத் திறனாளி சிறுவர்கள் 3 பேர் பலி

0 1652

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காது கேளாத மாற்றுத் திறனாளி சிறுவர்கள் 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

ஊரப்பாக்கத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் தொழில் செய்து வரும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் ஜம்பைய்யா மற்றும் அனுமந்தன்.

அவர்களின் மகன்கள் 3 பேர் கர்நாடகாவில் காது கேளாதோர் பள்ளியில் பயின்று வரும் நிலையில், பள்ளி விடுமுறைக்காக பெற்றோரைக் காண ஊரப்பாக்கம் வந்திருந்தனர்.

காலை உணவு வாங்குவதற்காக ஊரப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற அந்த சிறுவர்கள், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments