குஜராத்தில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்

0 2891

விஜயதசமி நாளில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழாவில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட அவர், பின்னர் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பொது மக்களை சந்தித்து விஜயதசமி வாழ்த்துக்களை அமித்ஷா பரிமாறிக் கொண்டார். பின்னர், பகுச்சரா மாதா ஆலயத்தில் அமைச்சர் அமித்ஷா வழிபாடு நடத்தினார்.

அங்கிருந்து புறப்பட்டு தமது சொந்த கிராமத்துக்கு சென்ற அவர், தாயார் பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

காந்தி நகர் அருகே இந்திய உழவர் உர கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திரவ நானோ எடிபி உரம் தயாரிக்கும் தொழிற்சாலையை அமித்ஷா பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments