இலங்கைக்கு மஞ்சள் கடத்த இருந்த 4 பேரும், எல்லை தாண்டி மீன் பிடித்த 8 இலங்கை மீனவர்களும் கைது..!

0 3410

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 8 பேர் மற்றும் கடத்தல் பொருட்கள் கொண்டு சென்ற மண்டபத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நபர்கள் தலைமன்னாரிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதாக சுங்க துறையினருக்கு கசிய தகவல் கிடைத்து இருந்தது. இதை அடுத்து,ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 8 பேரை அவர்களின் படகுகளுடன் பிடித்து வந்தனர்.

அப்போது மண்டபத்தைச் சேர்ந்த 4 பேர் பைபர் படகு ஒன்றில் மஞ்சள் மற்றும் கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. அவர்களும் கைது செய்து கொண்டுவரப்பட்டனர்.

இலங்கை மீனவர்களும் மண்டபத்து ஆட்களும் நடுக்கடலில் பொருட்களை மாற்றிக் கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments