சிவகாசியில் பேக்கரியில் வாங்கிய வெஜ் பப்ஸில் கருகிய நிலையில் இருந்த கரப்பான் பூச்சி ரூ.10,000 அபராதம்

0 1325

சிவகாசியில் வெஜ் பப்ஸில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரத்தில், பேக்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உணவுப்பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிவகாசி பைபாஸ் சாலையில் ராமானுஜம் என்பவருக்கு சொந்தமான ஐயங்கார் பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் 8 வெஜ் பப்ஸ் வாங்கியுள்ளார்.

அதில் ஒரு பப்ஸை சாப்பிட எடுத்த போது அதற்குள் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்ட அவர், சிவகாசி மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தார்.

பேக்கரியில் நடத்தப்பட்ட ஆய்வில், பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருள் தயாரித்ததாக நோட்டீஸ் வழங்கி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments