தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆயுதபூஜை கொண்டாட்டம்... பூஜை பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள்

0 3107

ஆயுதபூஜை விழா களைகட்டியுள்ள நிலையில், சந்தைகளில் திரளான மக்கள் குவிந்து பூஜை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

மதுரை, மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், பொரி, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியது.

திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் பூஜை பொருட்கள் விலை ஏற்றத்துடன் காணப்பட்டாலும், அனைத்துக்கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

கடலூரில் பூஜைக்கான பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. பொருட்கள் வாங்க, உழவர் சந்தை, பான்பரி மார்க்கெட் மற்றும் அண்ணா மார்க்கெட் போன்ற இடங்களில் மக்கள் குவிந்தனர்.

சேலத்தில் பட்டை கோயில் மற்றும் அக்ரஹாரம் கடை வீதி பகுதிகளில் பூ, வாழைமரம் பொரி,கடலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டிய நிலையில், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments