ஹமாஸ் போராளிகள் மீதான தரைவழித் தாக்குதல் 3 மாதங்கள் நீடிக்கும் - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் அறிவிப்பு

0 813

காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகள் மீதான தரைவழித் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வரும் நிலையில், மூன்று மாதங்கள் தாக்குதல் நீடிக்கும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்தார்.

ஹமாஸ் போராளிகளை முழுமையாக அகற்றுவதில் இஸ்ரேல் வெற்றிபெற்றால் அதுவே கடைசித் தாக்குதலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

17-ஆவது நாளை போர் எட்டியுள்ள நிலையில், மொத்தம் 6,100 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 5,431 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியில் 4,741 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments