குடிபோதையில் ஓட்டிச் சென்ற வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து.. சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழப்பு

0 2208

தெலங்கானாவில் குடிபோதையில் இயக்கப்பட்ட வாகனம் கவிழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள டாடா இன்ஃப்ரா நிறுவனத்திற்கு சொந்தமான வேனை ஓட்டுநர் ராஜு என்பவர் ஓட்டி சென்றார். ஜீடிமேட்லா என்ற இடத்தில் சென்றபோது வேன், திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில், வேன் ஓட்டுநர் ராஜூ போதையில் இருந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments