மாமன்னன் ராஜராஜசோழன் 1038ஆம் ஆண்டு சதயவிழா நாளை ஆரம்பம்... தஞ்சை பெரியக்கோவில் உள்பட நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிப்பு

0 1343

தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரத்து 38 ஆம் ஆண்டு சதயவிழா நாளை துவங்க உள்ளதை ஒட்டி பெரியக் கோவில் உள்பட நகரம் முழுவதும் மின் விளக்கு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கம் போல் ஜொலிக்கின்றன.

பெரியக் கோவில் விமானம், மராட்டா நுழைவுவாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில், ராஜராஜன் நுழைவு வாயில், கோயில் உள் பிரகாரம், வெளிபிரகாரம். கோட்டை மதில்சுவர் ஆகியவை மின்னொளியால் மின்னுகிறது.

ராஜராஜ சோழன் சிலை, அரசு மருத்துவமனை சாலை. பெரியக் கோவில் சாலை, பேரறிஞர் அண்ணா சிலை,  தந்தை பெரியார் சிலை என அனைத்து இடங்களும் மின் விளக்குகளாலும், மின் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு  நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments