குற்றம் சாட்டப்பட்ட நபரே பதிலளிக்கட்டும், கட்சி பதில் அளிக்காது... மஹுவா மொய்த்ரா வழக்கில் இருந்து விலகி நிற்க திரிணாமூல் காங். முடிவு

0 2938

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க தொழிலதிபரிடம் விலை உயர்ந்த பொருட்களை லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.மஹூவா மல்ஹோத்ராவுக்கு அவரது கட்சி ஆதரவளிக்கவில்லை.

இதுகுறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்ட திரிணாமூல் காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளர் குணால் கோஷ், குற்றம் சாட்டப்பட்ட நபரே பதில் கூறட்டும், கட்சி பதில் கூறமுடியாது என்றார்.

இதனிடையே, லோக்பால் அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ள பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே, நாட்டின் பாதுகாப்பை பணயம் வைத்துள்ள மஹூவா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments