ஆண்டுதோறும் அக்.21 காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாளாக அனுசரிப்பு

0 807

ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவல்துறையில் வீரவணக்கநாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பணியின்போது உயிரிழந்த 188 காவலர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை, மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு தூணில் டிஜிபி சங்கர் ஜிவால், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பயிற்சி காவலர்கள் மைதானத்தில் உள்ள நினைவுத் தூணில் ஆயுதப்படை டிஎஸ்பி குமரன், திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி அனுமந்தன் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

தருமபுரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் நினைவஞ்சலி செலுத்தினர்.

கரூர், நாமக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments