அரசு அதிகாரியாக நடித்து மோசடி : 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வி.சி.க. பெண் நிர்வாகி கைது

0 4312

சேலத்தில், அரசு அதிகாரி எனக் கூறி பலரிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் வி.சி.க பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட துணை செயலாளரான காயத்திரி, அரசு வேலை வாங்கித் தருவதாகவும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறியும் மோசடி செய்ததாக எழுந்த புகார்களில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2 மாதங்களாக தலைமறைவாக இருந்த காயத்திரியை சென்னையில் கைது செய்த தனிப்படை போலீஸார், அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments