பண்ருட்டி அருகே ஸ்கூட்டியில் சென்ற 2 பெண்கள் டிராக்டரில் சிக்கி உயிரிழப்பு

0 2528

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி உயிரிழந்தனர்.

ஏ.கே பாளையம் பகுதியைச் சேர்ந்த தாட்சாயினி மற்றும் ஜெயலட்சுமி ஒரே இரு சக்கர வாகனத்தில் நூறு நாள் வேலைக்கு சென்றுள்ளனர். குச்சிபாளையம் அருகே சென்றபோது கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் மோதியதில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற பண்ருட்டி போலிசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments