ஒவ்வொரு துறையிலும் புதிய சரித்திரம் படைக்கும் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

0 1086

21ம் நூற்றாண்டில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றி புதிய சரித்திரத்தை எழுதி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் சாஹிபாபாத்தில் நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், குழந்தைப் பருவத்தை ரயில்வே பிளாட்பாரத்தில் கழித்த தனக்கு, ரயில்களின் புதிய வடிவம் உற்சாகம் தருவதாக தெரிவித்தார்.

இன்றைய இந்தியா, சந்திரனில் தரையிறங்குவதாகவும், ஜி20 உச்சி மாநாட்டை திறம்பட நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் கொண்டு சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments