மார்க் ஆண்டணி படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு லஞ்சம் கேட்டதாக விஷால் குற்றச்சாட்டியில் மேலாளரிடம் சி.பி.ஐ. விசாரணை

0 3830

மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு லஞ்சம் கேட்ட விவகாரத்தில் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணனிடம் சி.பி.ஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள தணிக்கை அதிகாரிகளுக்கு ஆறரை லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டுள்ளனர். லஞ்ச பரிவர்த்தனையை விஷாலின் மேலாளர் மேற்கொண்டதாக கூறப்பட்டதால் அவரை மும்பைக்கு வரவழைத்து விசாரித்து வருகின்றனர். தணிக்கை குழுவைச் சேர்ந்த மெர்லின் மேனகா, ஜிஜா ராமதாஸ், ராஜன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments