திண்டுக்கல்லில் 2 கோடி ரூபாய் கடனுக்காக மூன்று நாட்களாக வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு குடும்பத்தினரை போலீஸார் மீட்பு

0 2178

திண்டுக்கல்லில், 2 கோடி ரூபாய் கடனுக்காக மூன்று நாட்களாக வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு குடும்பத்தினரை போலீஸார் மீட்டனர்.

ரியல் எஸ்டேட் அதிபரான திண்ணப்பன் தொழிலுக்காக வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லையெனக் கூறி கடன் கொடுத்த கும்பல் அவரது வீட்டிற்குள் கட்டில், பீரோ, சமையல் பொருட்களுடன் புகுந்து குடியேறி கொண்டதோடு அவரது குடும்பத்தினரையும் சிறை பிடித்ததாக கூறப்படுகிறது.

சொத்தை பத்திர பதிவு செய்து தருவதாகக் கூறி வெளியே வந்த திண்ணப்பன் இதுகுறித்து மாவட்ட எஸ்.பியிடம் நேரில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீஸார் திண்ணப்பன் வீட்டிலிருந்த ரவி மற்றும் சரவணனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments